கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்ததில் பின்னால் வந்த லாரியில் சிக்கி பெண் பலி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் பின்னால் வந்த லாரியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுசூளாகரை கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் அவரது மனைவி இளமதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஒருபகுதியில் சாலை விரிவு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இவர்கள் சென்ற இருசக்கரவாகனம் அப்பகுதியின் சாலையோரத்தில் கொட்டப்பட்ட மண்ணில் சறுக்கியது.

இதனால் புஷ்பராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரின் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி இளமதி இருசக்கர வாகனத்தை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் இளமதியின் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: