5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : 5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போதையே தேர்தல் முடிவுகளே, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா என்பதை இப்போதே கூற இயலாது என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். மேலும் ஜனவரி மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: