சென்னை: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் அக்கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கட்சி தலைவராக பவியேற்று ராகுல் காந்தி உழைத்த உழைப்பு நன்றாக பலன் தந்துள்ளதாக கூறினார். 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர்.