பைக்கில் லிப்ட் கேட்டு 3 சவரன் பறிப்பு

சென்னை: வடபழனி திருநகரை சேர்ந்த தனிஷ்பாபு (28) நேற்று முன்தினம் இரவு தனது பைகில் தி.நகர் நாதமுனி தெரு அருகே சென்றபோது, 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். தனிஷ்பாபு அவரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகே சென்றபோது, பைக்கை நிறுத்தும்படி திருநங்கை கூறியுள்ளார். அதன்படி, அவர் பைக்கை நிறுத்தியபோது, திடீரென அவர் கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்து கொண்டுக் பின்னால் தயாராக வந்த ஆட்டோவில் திருநங்கை தப்பினார். இதுகுறித்து புகாரின் பேரில், பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஆதம்பாக்கம் வானுவம்பேட்டையில் டிபன்  கடை நடத்தி வருபவர் ஆசிஷ்குமார் (35). நேற்று முன்தினம் இவரது கடையில் அதே  பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தம்பி 16 வயது சிறுவன்  ஆகியோர் சாப்பிட்டுவிட்டு பணம் தரமறுத்து தகராறில் ஈடுபட்டதுடன், தட்டிக்கேட்ட ஆசிஷ்குமாரை இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பினர். புகாரின்பேரில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.  

* குரோம்பேட்டை கணபதிபுரம் கண்ணபிரான் தெருவை சேர்ந்த வினோத்குமார் மனைவி சவுமியா (32) குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.

* அம்பத்தூர் சலவையாளர் குடியிருப்பை  சேர்ந்தவர் ஹரி (39). வானகரம் முதல்நிலை ஊராட்சியில்  துப்புரவு பணி சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ம் தேதி இவரது பைக் பெட்டியை உடைத்து ₹3 லட்சத்தை கொள்ளையடித்த பூந்தமல்லி குளக்கரை தெருவை சேர்ந்த ஹரி  மாத்தையா பிரதாப் சிங் (41) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது  செய்தனர். இதில் தொடர்புடைய  தேவானந்தா சிங் (40) என்பவரை தேடி வருகின்றனர்.

* தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில்  தெருவில் உள்ள பொதுப்பணி துறை  குடியிருப்பை சேர்ந்தவர் குணசேகரன் (60). பொதுப்பணி துறையில் அதிகாரியாக  இருந்து ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தி இருந்த இவரது கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து உடைத்துவிட்டு தப்பினர்.

* கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாதா (28) என்பவரிடம் செல்போன் பறித்த அயனம்பாக்கம் பாட சாலையை ேசர்ந்த மங்களநாதன் (26),  செல்வமணிகண்டன் (25), வடபழனி குமரன் காலனியை ேசர்ந்த ரமேஷ் (25),  ஆழ்வார் திருநகரை சேர்ந்த நாச்சி (எ) ராஜேஷ் (25) ஆகியோரை போலீசார் கைது  செய்தனர்.

* சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் டன் கணக்கில் இரும்பு கம்பி திருடிய சைதாப்பேட்டை தாடண்டர் நகரை சேர்ந்த பாலு (43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* மணலி, சின்னமாத்தூர் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரி (37), மலர் (26), மகரஜோதி (26), கவிதா (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நேற்று 3 சிறுவர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களை போலீசார் அழைத்து விசாரித்தபோது, அம்பத்தூரை சேர்ந்தவர்கள் என்றும் மெரினா கடற்கரையை சுற்றிப்பார்க்க வந்து, எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் தவித்தது தெரிந்தது. அவர்களை மீட்டு அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சிறுவர்களை குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

40 லட்சம் மதிப்பு நிலம் அபகரித்த தம்பதி கைது

சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தை ேசர்ந்த மாலா என்பவரின்  40 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த சேகர் (54), அவரது மனைவி அஞ்சலிதேவி (40) ஆகியோரை போலீசார்  ேநற்று கைது செய்தனர்.

ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

பாளையங்கோட்டை அடுத்த கலியாவூரை சேர்ந்தவர் சம்சுதீன் (45). சென்னை ஆலந்தூரில் குடும்பத்துடன்  தங்கி இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர், நண்பர்கள் 6 பேருடன்  நேற்று முன்தினம் நெல்லைக்கு சுற்றுலா சென்றார். மாலை 6 மணிக்கு சம்சுதீன் அருகன்குளம் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: