×

வியாபாரிகளிடம் 3 கோடி நகைகள் திருட்டு

சித்தூர்: மும்பையைச் சேர்ந்தவர் தேவா, பிரபல நகை வியாபாரி. இவரிடமிருந்து நகைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர்கள் சஞ்சய்(24), கேதார்(27). இவர்கள் 2 பேரும் மும்பையில் இருந்து கடந்த 8ம் தேதி தங்க நகைகளை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் வந்து வியாபாரிகளிடம் காட்டிவிட்டு, 15 கிலோ தங்க நகைகளை 2 பைகளில் எடுத்துக்கொண்டு ஒரு தனியார் பஸ்சில் பெங்களூருவுக்கு சென்றனர். பங்காருபாளையம் அருகே ஒரு ஓட்டலில் பஸ் நின்றது. அப்போது நகை கொள்ளைய டிக்கப்பட்டது.

திருடப்பட்ட தங்க நகைகளின் எடை 9 கிலோ என்பதும் அதன் மதிப்பு 3 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே இதேபாணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகை வியாபாரியிடம் 3 கோடி தங்க நகைகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 3 crores ,jewelry stealing , businessmen
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது