×

கானத்தூரில் பயங்கரம் விஷம் கொடுத்து ஒன்றரை வயது மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை

சென்னை:  சென்னை அடுத்த பனையூர் 7வது அவென்யூவை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர், அதே பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ெஜயா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷோர் என்ற மகன் இருந்தான். இவர்களது சொந்த ஊர் மயிலாடுதுறை.நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர், அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர். நள்ளிரவு 2 மணியளவில் ஜெயா திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்துள்ளார். அப்போது, கணவர் சுரேஷும், குழந்தை கிஷோரும் இறந்து கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயா கூச்சலிட்டு அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.பின்னர், கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சுரேஷ் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:இந்த சம்பவத்துக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். என்னிடம் திறமை இல்லை. யாருக்கும் உபயோகமாக இல்லாமல் உள்ளேன். மனைவி ஜெயா, என்னை மன்னித்து விடுங்கள். அவரிடம் கூறாமல் இந்த முடிவை எடுத்து விட்டேன். எனது அக்கா வீட்டுக்காரர், அக்காவிடம் நகை, பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்கிறார்.

அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிடம் சண்டை போட வேண்டாம். மகனை விட்டு செல்ல எனக்கு மனம் இல்ைல. இவ்வாறு கடிதத்தில் கூறியிருந்தது. மேலும், போலீஸ் விசாரணையில் பண்ணை வீட்டில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த சுரேஷுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால், குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார். மேலும், குழந்தையையும் கவனித்துக்கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில், தனது அக்கா கல்யாணத்தின்போது அவளுக்கு நகை செய்து போடுவதாக அவரது கணவர் வீட்டாரிடம் கூறியுள்ளார். ஆனால், வாக்கு கொடுத்தபடி அவருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், அக்காவின் கணவர் சுரேஷிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். எனவே, மனம் உடைந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷின் அக்கா கணவரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanathur , Kanathur, father, killed, suicide
× RELATED பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில்...