சென்னை: சென்னை விமானநிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் இறகு பந்துகள் இருக்கும் டப்பாக்களில் ரூ.13.5 லட்சம் மதிப்புடைய 450 கிராம் தங்கக் கம்பிகளை மறைத்து எடுத்து வந்த சென்னையை சோ்ந்த அப்துல் மைதீன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.