சென்னை விமானநிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை: சென்னை விமானநிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் இறகு பந்துகள் இருக்கும் டப்பாக்களில் ரூ.13.5 லட்சம் மதிப்புடைய 450 கிராம் தங்கக் கம்பிகளை மறைத்து எடுத்து வந்த சென்னையை சோ்ந்த அப்துல் மைதீன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  

 

மேலும் சென்னையீலிருந்து மலேசியா செல்லவிருந்த விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை உள்ளாடைகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற சென்னையை சோ்ந்த சிக்கந்தா்,ராவுத்தா் நைனாசலீம் முகமது,பிரம்மஷா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: