பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி - ஆந்திரா அணிகளிடையே நடந்த ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் ஆந்திரா 390 ரன், டெல்லி 433 ரன் குவித்தன. ஆந்திரா 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு சுருண்டது. 88 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது. டெல்லி அணிக்கு 3 புள்ளிகளும், ஆந்திராவுக்கு 1 புள்ளியும் கிடைத்தன. இந்த போட்டியுடன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர் தனது குடும்பத்தினருடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.