வெலிங்டன்: நியூசிலாந்து ஏ அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் (அங்கீகாரமற்றது), 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
மவுன்ட் மவுங்காநுயி, பே ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து ஏ அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. வொர்க்கர் 99, வில் யங் 102, டேரில் மிட்செல் 45 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி, 49 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்து வென்றது. ஷுப்மான் கில், மயாங்க் அகர்வால் தலா 25 ரன், ஷ்ரேயாஸ் அய்யர், விஜய் ஷங்கர் தலா 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷண் டக் அவுட்டானார். அபாரமாக விளையாடிய கேப்டன் மணிஷ் பாண்டே 111 ரன் (109 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), அக்சர் பட்டேல் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி