பாலியல் தொல்லை; வாலிபர் கைது

பல்லாவரம் அனகாபுத்தூர் வினோபாநகரை சேர்ந்த 30 வயது பெண் தனது, கணவன் வேலைக்கு சென்றதால், நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (23) என்பவர் இவரது வீடு புகுந்து பாலியல் செய்ய முயன்றுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் விரைந்தனர். உடனே ஜெயக்குமார் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் வந்து அதே பகுதியில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: