×

அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றுவிட்டு கணவன் திடீர் தற்கொலை: வாய்த்தகராறு விபரீதத்தில் முடிந்தது

ஆலந்தூர்: சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் மோகன் (48). இவரது மனைவி பரமேஸ்வரி (45). தம்பதிக்கு தினேஷ்குமார் (20), சம்பத் (17) என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தூங்கும் முன்பு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரமேஸ்வரி பதிலுக்கு பதில் பேசியதால், ஆத்திரம் அடைந்த மோகன் சமையலறையில் இருந்த அம்மிக்கல்லை பரமேஸ்வரி தலையில் போட்டு உள்ளார். இதில், மண்டை உடைந்து பரமேஸ்வரி ரத்தவெள்ளத்தில் அலறி துடித்து உள்ளார். இவரது அலறல் சத்தம்கேட்டு, 2 மகன்கள் ஓடி வந்தனர். அதற்குள் மோகன் தப்பி சென்றார். புகாரின்பேரில் கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் விரைந்து வந்து பரமேஸ்வரியை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி நேற்று மாலை இறந்தார். இதையடுத்து தப்பியோடிய மோகனை பிடிக்க கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொலையாளி மோகன் நேற்று காலை மாமண்டூர், ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து படாளம் போலீசார், கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டி போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தபோது மனைவியை கொன்றதற்காக போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ammilai ,suicide , Ammil, killing his wife and suddenly committing suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை