×

‘டிராப்’ செய்வதாக பைக்கில் அழைத்துச் சென்று பயங்கரம் இளம்பெண்ணை கொன்று சடலத்துடன் பாலியல் உறவு கொண்ட காமுகன் கைது

பெங்களூரு: பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்ற வாலிபர், அவரை கொலை செய்து சடலத்தை  பலாத்காரம் செய்து சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தாவணகெரே  மாவட்டத்தை சேர்ந்தவர் ரேகா (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்  தனியாருக்கு சொந்தமான ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.  இதற்காக தினமும் அவர் பஸ்சில்தான் சென்று வருவார். சில நாட்களுக்கு முன், வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தொழிற்சாலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.  நீண்ட  நேரமாகியும் பேருந்து வரவில்லை. அப்போது, அவருக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார்.  ரேகாவை பார்த்த அவர்  பைக்கை நிறுத்திவிட்டு விசாரித்தார். அப்போது, ரேகா அவரிடம் பேருந்து  வரவில்லை என்று கூறினார். அதை கேட்ட வாலிபர், ‘உனக்கு தொந்தரவு  இல்லை என்றால், பைக்கில் நானே டிராப் செய்கிறேன்’ என்றார். நீண்ட நேரமாகயும் பேருந்து வராததால், வாலிபர் பைக்கில்  செல்ல ரேகா முடிவு செய்தார். பைக்கில்  ஏற்றிக் கொண்டார். சிறிது  தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக் திடீரென நின்றது. அதிர்ச்சி அடைந்த ரேகா, ‘என்ன ஆனது?’ என கேட்டார்.  

அதற்கு வாலிபர் பைக்கை சோதனை செய்வது போல் சிறிது நேரம் நடித்து விட்டு, ‘பெட்ரோல் தீர்ந்து விட்டது’ என்றார். மேலும், ‘கவலைப்படாதே. சிறிது தொலைவில் பெட்ரோல் பங்க்  உள்ளது. 2 பேரும் நடந்து சென்று பெட்ரோல் வாங்கி வருவோம்’ என்றும் கூறினார்.  அதை நம்பிய ரேகா, அவருடன் நடந்து சென்றார். அப்போது, வாலிபர் சாலை வழியாக செல்லாமல்  குறுக்கு வழி என கூறி காட்டுப் வழியாக அழைத்துச்  சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த காட்டு பகுதியை பார்த்ததும்  ரேகாவுக்கு சந்தேகம் எழுந்தது. ஏதோ தவறு நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர், ‘திரும்பி சென்று விடலாம்’  என்று கூறினார். ஆனால், ‘இன்னும்  சிறிது தூரம்தான்’ என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்தார் வாலிபர். ஆனால், ரேகா செல்ல மறுத்து விட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். அப்போது, வாலிபர் தனது  சுயரூபத்தை காட்டத் தொடங்கினார். ரேகாவை கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். ரேகா  அவரை எதிர்த்து போராடினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், ரேகா அணிந்திருந்த துப்பட்டாவால் அவருடைய கழுத்தை  நெரித்தார்.

அதில் ரேகா துடிதுடித்து இறந்தார். பின்னர், ரேகாவின் ஆடைகளை கலைந்து சடலத்தை வாலிபர் பலாத்காரம் செய்தார். ஆசை தீர்ந்ததும்,  சடலத்தை போட்டு விட்டு பைக்கில் தப்பி விட்டார். நள்ளிரவு ஆகியும் ரேகா வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பின்னர், தாவணகெரே போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், ரேகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ரேகா கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து  துர்நாற்றம் வீசியது. அங்கு  பறவைகள் அதிகளவில் பறந்து கொண்டே  இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த சிலர், துர்நாற்றம் வீசிய இடத்துக்கு சென்று  பார்த்தனர். அங்கு நிர்வாண நிலையில் அழுகிய இளம்பெண் சடலம் கிடந்தது.  போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சென்று சடலத்தை  கைப்பற்றினர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் ரேகா என்பது உறுதியானது. பிரேத பரிசோதனையில், ரேகா கொலை செய்யப்பட்ட பிறகு பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலையாளியை போலீசார் தேடியும், துப்பு கிடைக்கவில்லை. ரேகா வேலை பார்த்து வந்த ஆயத்த ஆடை நிறுவனத்திலும், அக்கபக்கம் உள்ள கடைகளிலும் விசாரித்தபோது ரங்கசாமி என்ற வாலிபர் ரேகாவை  அடிக்கடி தூரத்தில் இருந்து கண்காணித்தது பற்றி தெரிய வந்தது. ஆனால், இது ரேகாவுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரங்கசாமியை கைது செய்தனர்.  அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்தான், மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் தெரிய வந்தது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  காவலில் எடுத்துள்ளனர். இதுபோல் அவர் வேறு பலாத்காரம், கொலைகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறாரா தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரேகாவுக்கு நடந்த சோகம், தாவணகெரே மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bike, teenager, corpse, sexual relationship
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...