சென்னை: ஐஏஎஸ் அதிகாரி மனைவியிடம் செல்போன் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் வசிப்பவர் குமரகுருபரன் (38). ஐஏஎஸ் அதிகாரியான இவர் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பத்திரப்பதிவுதுறை அலுவலகத்தில் ஐஜியாக பணியாற்றுகிறார். இவரது மனைவி அனுராதா (32). இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஷாப்பிங்மால் சென்றுவிட்டு, கார் டிக்கியை திறந்து பொருட்களை ைவத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது செல்லுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது அனுராதா அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி அனுராதாவின் கையில் இருந்த விலைஉயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
இதுகுறித்த கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெகதீசன், டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்தனர். சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போன் பறித்த ஆசாமியை தீவிரமாக தேடுகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி