கேரளாவுக்கு 369 ரன் இலக்கு

சென்னை : தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், கேரள அணிக்கு 369 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழகம் 268 ரன், கேரளா 152 ரன் எடுத்தன. 116 ரன் முன்னிலையுடன் நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழகம், 70.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கவுஷிக் காந்தி 59, முகுந்த் 33, கேப்டன் இந்திரஜித் 92, ஷாருக் 34, ஜெகதீசன் 19 ரன் விளாசினர்.

இதையடுத்து, 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கேரளா 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்துள்ளது. கை வசம் 9 விக்கெட் இருக்க, அந்த அணி வெற்றிக்கு இன்னும் 342 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: