×

கோவையில் யானயைில் பிடியில் சிக்கிய தம்பதியினரை பட்டாசு வெடித்து மீட்ட வனத்துறையினர்

கோவை: கோவையை அடுத்த கணவாய் பகுதியில் காட்டுயானைகளின் பிடியில் சிக்கிய தம்பதியினரை வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீட்டனர். கோவை மாவட்டம் கணுவாய் அருகே காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள செங்கள் சூளையில், மதுரையைச் சேர்ந்த முத்துசாமி - பனையம்மாள் தம்பதியினர் தங்கி வேலை பார்த்து கொண்டு வருகின்றனர். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டியுடன் வந்த காட்டுயானை முத்துசாமி தம்பதி தங்கி இருந்த வீட்டின் ஓடுகளை உடைக்கத் துவங்கியது.

இதையடுத்து தம்பதி இருவரும் யானைகளிடம் இருந்து தப்பி செங்கல் சூளையில் பதுங்கியதோடு, அருகிலேயே ரோந்து பணியிலிருந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், குட்டி யானையும் தாய் யானையையும் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். மேலும் கணவாய் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் இருப்பதாகவும், யானையின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forests , Forests,burst crackers,elephanat,coimbatore
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை