சென்னை : தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பும் என நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அணையின் நீர்மட்டம் தற்போதைய மழையால் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.