×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய தொடரும் மழை

சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும்காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் துவங்கிய மழை, இரவும் தொடர்ந்து தற்போது வரை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி கூடுதல் வலுப்பெறும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.

சாலிகிராமம், ராமாபுரம், வளசரவாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், அயனாவரம், புழல், கொரட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர் பல்லாவரம், தாம்பரம், அடையாறு, ஒ.எம்.ஆர், இ.சி.ஆர், மேடவாக்கம், அனகாபுத்தூர், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suburbs ,Chennai , Chennai, rain and suburbs
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...