×

சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு: பெண் மருத்துவர் உட்பட 4 பேர் பலி

சிகாகோ:  அமெரிக்காவில் மருத்துவமனையில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் மருத்துவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டமாரோ ஓ நீல். நேற்று மருத்துவமனையில் பார்க்கிங் பகுதியில் வாலிபர் ஒருவர் டாம்ரோவுடன் தகராறில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பெண் டாய்னா வெல் என்ற மருந்தாளுனர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இந்நிலையில், அந்த நபர் அந்த பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு  டமாரோவை துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீண்டும் சுட்டார்.

இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், டாய்னா லெஸ் அங்கிருந்து தப்பி செல்வதற்கு முயன்றார். ஆனால், அவரையும்  துப்பாக்கியால் அந்த நபர் சுட்டுக் கொன்றார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் போலீசாரையும் அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில், போலீஸ் அதிகாரி சாமுவேல் ஜிமினெஸ் (28) உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவர் யார்? எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chicago ,victims ,doctor , Chicago fire, female doctor
× RELATED மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய்...