×

ரூ.3.40 கோடி மோசடி ஒருவர் சரண்

சென்னை: அண்ணாநகரில் இயங்கி வரும் பி.ஆர்.ஆர். டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி வங்கி கணக்கு  தொடங்கி ரூ.3.40 கோடி பணத்தை கணக்காளராக பணியாற்றி அருண் சஞ்சய் மற்றும் கணினி மேலாளராக இருந்த அரிபாபு ஆகியோர் மோசடி செய்ததாக அண்ணாநகரை சேர்ந்த பி.ஆர்.ஆர்.டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுகுமார் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான அருண் சஞ்சய் நேற்று பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்விழி முன்பு சரணடைந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saran , fraud,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...