தப்பியோடிய கைதி கைது

பிராட்வே: சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பாபு (எ) பல்சர் பாபு (39). பிரபல ரவுடி. இவா் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. கடந்த ஆண்டு பல்சர் பாபுவை, குண்டர் சட்டத்தில் கைது செய்த காசிமேடு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 14ம் தேதி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பாபு, 15ம் தேதி அதிகாலையில், பாதுகாப்புக்கு இருந்த போலீசாருடன் டீ குடிக்க பிராட்வே சாலையில் உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது, உடன் சென்ற போலீஸ்காரர், பைக்கில் சாவியை வைத்து இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பாபு, அந்த பைக்கில் தப்பி சென்றார். இந்நிலையில், தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாபு பதுங்கி இருந்த பாபுவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், போலீஸ்காரரிடம் திருடிய பைக்கை விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தது தெரிந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: