×

கார் கண்ணாடிகளை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது: மும்பை, டெல்லியிலும் கைவரிசை

சென்னை: சென்னையில் கடந்த மாதத்தில் மட்டும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான அண்ணாநகர், தி.நகர், வடபழனி, பாண்டிபஜார், அபிராமபுரம், அடையார், மயிலாப்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் மற்றும் வீடு, உணவு விடுதிகள் அருகே நிறுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதுகுறித்து, தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், திருச்சி மில்க் காலனியை சேர்ந்த மூர்த்தி (எ) கருணாமூர்த்தி (43) கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் மூர்த்தியை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், மூர்த்தி, ரயில் மூலம் மும்பை, டெல்லி, ெபங்களூரு நகரங்களுக்கு சென்று நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து கொள்ளையில் ஈடுபட்டது வந்தது தெரிந்தது. அவனிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pirate ,Mumbai ,Delhi , Stolen car glass, arrest, Mumbai, Delhi
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...