×

இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல் நிவாரண உதவியை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: நிவாரண உதவியை  இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல் மக்களுக்கு நேரடியாக, காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்” என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: அரசு அறிவித்த ஆயிரம் கோடி நிவாரண உதவியை இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல் மக்களுக்கு நேரடியாக, காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களின் அலட்சியப் போக்கால் மக்கள் சாலையில் வாழ்கின்றதை கேட்கும் பொழுது மனது மிகவும் வேதனை அடைகிறது.மக்களும் தங்களுடைய ஆவேச உணர்வுகளை மறந்து, வன்முறைக்கு இடம்கொடுக்காமல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இன்றைக்கு மக்களின் அத்தியாவசிய தேவையான மண்ணெண்ணை, குடிநீர், மின்சாரம் போன்றவைகளை போர்கால அடிப்படையில் செய்திட வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth , Intermediaries , provide relief assistance ,people directly, interference, Vijayakanth's assertion
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...