×

தம்பிதுரையிடம் குறைகளை தெரிவித்த பெண்ணுக்கு அதிமுக நிர்வாகி மிரட்டல் : வடமதுரையில் பரபரப்பு

வேடசந்தூர்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் பிரச்னைகள் குறித்து குறை கூறிய பெண்ணை அதிமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் வடமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி மேட்டுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பரமசிவம் எம்எல்ஏ, கலெக்டர் வினய், தாசில்தார் சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோர் நேற்று பொதுமக்களிடம் குறைகள் கேட்க சென்றனர்.  அப்போது வயதான பெண் ஒருவர், ‘‘அதிமுக கட்சியினர் வீடுகளில் ஒரு குழாய்க்கு பதில் 2, 3 குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுத்து உள்ளனர். ஆனால் தண்ணீர் பிடிக்க தெருவில் ஒரு குழாய் கூட இல்லை,’’ என தம்பிதுரையிடம் முறையிட்டார்.

அப்போது வடமதுரை அதிமுக துணை செயலாளர் கல்யாணராமன் அப்பெண்ணை பார்த்து, ‘நீ பேசாதே’ என மிரட்டினார். உடனே அப்பெண், ‘‘ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் வீடு தேடி வந்து பேசினீர்கள், இப்போது உண்மையை சொன்னால் பேசக்கூடாது என மிரட்டுகிறீர்களா’’ என்று ஆவேசமாக கூறினார். பின்னர் பிரச்னை ஏற்படும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் குறை கேட்க சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,brother , AIADMK threatens ,woman ,complained
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...