×

சென்னையில் இருந்து திருச்சிக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சென்னையில் இருந்து திருச்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் திருச்சிக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மேலும் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை 2 நாட்களாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக, சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1 மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,DMK ,Trichy ,Chennai , Stalin,sent,relief materials,DMK,Chennai,Trichy
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...