இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!
* உங்களை தொகுதியில் பார்க்கவே முடியவில்லை என்று மக்கள் ெசால்கிறார்களே?
அதெல்லாம் சுத்த பொய். அரசு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்கிறேன்.* தொகுதிக்கு நீங்கள் செய்தது என்ன?நகரங்களில் மட்டுமே அமைக்கப்படும் ‘ஹைமாஸ்’ மின்கோபுர விளக்குகளை கிராமங்களில் அமைத்துள்ளேன். தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு புதிய பெட்டிகளை இணைத்தது உட்பட ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் கட்ட உதவினேன்.* தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக குரல் கொடுத்தீர்களா?நாடாளுமன்றத்தில் எனது குரல் உரக்க ஒலித்ததால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை நமக்கு கிடைத்துள்ளது. சீனப்பட்டாசை தடை செய்யவும் பேசினேன். பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி.யை மத்திய அமைச்சரிடம் முறையிட்டு 18 சதவீதமாக குறைத்தேன். அதேபோல், தீப்பெட்டி தொழிலைக் காக்க 18 சதவீத ஜிஎஸ்டி.யை 5 சதவீதமாக குறைக்கும்படி கோரியுள்ளேன்.மூன்று அவதாரம்தற்போதைய விருதுநகர் மக்களவை தொகுதி இதுவரை 3 அவதாரங்களை எடுத்துள்ளது. 2008 தொகுதி சீரமைப்புக்குப் முன்பு வரை இது சிவகாசி தொகுதியாக இருந்தது. அதற்கு முன்பு வரை சிவகாசி தொகுதியும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியாக இருந்தது. நான் கேஸ் போட்டு என்ன ஆக போகுது?‘தொகுதியின் எம்பி என்ற முறையில், உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு ஆலைகளுக்கு ஆதரவாக நீங்களும் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கலாமே?’ என்ற கேள்விக்கு, ‘‘ஏற்கனவே நிறைய வழக்கு அங்க இருக்கு... நான் புதுசா போட்டு என்னத்த ஆகப் போகுது?’’ என்று பதிலளித்தார் ராதா.பாழாய் போகும் பட்டாசு பூமி‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகி–்ன்றனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என 3 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 23ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘இந்தியா முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடையில்லை. ஆனால், இந்த ஆண்டு முதல் பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்க வேண்டும், சரவெடிகளை வெடிக்கக் கூடாது. பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) மூலப்பொருளை பயன்படுத்தக் கூடாது. தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்’ என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நேரக் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 40 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகாமல் தேக்கமாகின. ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 13ம் தேதி முதல் ஆலைகளை மூடி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவில்லை. தமிழக தொழில் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடக்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க எம்பி ராதாகிருஷ்ணனும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இது தொடர்பாக எம்பி.யிடம் பலமுறை முறையிட்டும், பட்டாசு ஆலை பிரச்னையை பிரதமரிடமோ, மத்திய அமைச்சரிடமோ பேசி தீர்க்கவில்லை என்பதே 8 லட்சம் தொழிலாளர்களின் ஆதங்கமாக உள்ளது. இது குறித்து ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘சீன பட்டாசை தடை செய்யக்கோரி, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். பட்டாசு ஆலை பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி, பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி.யை 18 சதவீதமாக குறைத்தேன். தீப்பெட்டி தொழிலை காக்க 18 சதவீத ஜிஎஸ்டி.யை 5 சதவீதமாக்க கோரியுள்ளேன்’’ என்றார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி