சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மட்டும் காரணமல்ல என்று அறிக்கையை மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.