சென்னை: கஜா புயல் மீட்பு பணிகளுக்கு தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுபோன்று ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போதும், தற்போதைய கேரள மாநில பெரு வெள்ளம் நிகழ்வுகளின் போதும் மக்களின் துயரத்தினை துடைக்கும் விதமாக ஒருநாள் ஊதியம் வழங்கியுள்ளோம்.