×

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கலாம்: தமிழக பாஜ அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேதங்களை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் ஏற்கனவே களத்தில் முழுவதுமாக இறங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நிவாரண பொருட்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நிவாரண பொருட்கள் வழங்க விருப்பம் உள்ளவர்கள் கமலாலயத்தில் நேரடியாக அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் பொருட்களை பெற்று தலைமை அலுவலகம் கமலாலயத்திற்கு  உடனடியாக அனுப்பவும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victims ,storm ,Ghazi ,announcement ,BJP ,Tamil Nadu , gaja storm, Relief, Tamil Nadu BJP,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...