செங்கல்பட்டு அருகே பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி பரிதாப பலி

சென்னை: செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். செங்கல்பட்டு அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களது 2வது மகள் தமிழினிக்கு மூன்றரை வயதாகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழினி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமானதால் பெற்றோர், அவளை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்ததில், தமிழினி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர் கூறியுள்ளார். இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி நேற்று அதிகாலை 3 மணியளவில் பரிதாபமாக இறந்தாள். இது கொளத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பையும், மக்களிைடயே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: