சென்னை: செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். செங்கல்பட்டு அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களது 2வது மகள் தமிழினிக்கு மூன்றரை வயதாகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழினி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமானதால் பெற்றோர், அவளை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.