சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் காதர் மொகிதீன் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் அபுபக்கர் எம்எல்ஏ வந்திருந்தார். இந்த சந்திப்புக்கு பின்பு காதர் மொகிதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 24ம் தேதி வரை பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவை காப்போம் என்ற பேரணியை கேரளாவில் உள்ள காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை நடத்த இருக்கிறோம். இந்த பேர ணியில் முஸ்லிம் லீக் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். வரும் 2ம் தேதி பேரணியை முன்னிட்டு கோழிக்கோட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.