அண்ணா பல்கலை, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கஜா புயல் தாக்கம் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடக்க இருந்த டிப்ளமோ படிப்பு தேர்வுகள் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் தக்கியது. அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் இன்று நடத்தப்படும் டிப்ளமோ படிப்புகளுக்கான எழுத்து தேர்வுகள், 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று நடக்க உள்ள அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 17ம் தேதி நடக்கும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடக்கும். 22ம் தேதியில் இருந்து மற்ற தேர்வுகள் அட்டவணைப்படி நடக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: