சென்னை: டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் உருவான கஜா புயலின் கோரதாண்டவத்துக்கு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்னுயிரையும், வீடுகளையும், கால்நடைகளையும் இழந்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.