வேளச்சேரி: அடையாறு எல்.பி.சாலையில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதாக நேற்றும் முன்தினம் நள்ளிரவு அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் அருகே 5 பைக்குகள் வந்த 10 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்கள் அனைவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், பூந்தமல்லி சேர்ந்த கவுதம் (20), ஐயப்பன் (20) உட்பட 10 பேர் மெரினா கடற்கரையில் இருந்து பைக் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 10 பேர் மீதும் போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு தலா 1100 அபராதம் விதித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி