சென்னை : லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஷெனாய் நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ராணி அம்மாள் என்பவருக்கு வீடு இருந்துள்ளது. இவர், தனது மகள்களுக்கு அந்த வீட்டை கிரையம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், வீட்டின் உரிமத்தை தங்களது பெயருக்கு மாற்றி தரக்கோரி கடந்த 2010ல் விண்ணப்பித்துள்ளனர். அப்போது பணியில் இருந்த அதிகாரி கணேசன், பில் கலெக்டர் வரலட்சுமி ஆகியோர் தங்களது பணியை செய்ய ராணி அம்மாளின் பேத்தி மல்லீஸ்வரியிடம் 1500 லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மல்லீஸ்வரி, இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியமாக தகவல் அளித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்படி மல்லீஸ்வரி ரசாயனம் தடவிய பணத்தை கணேசனிடம் அளித்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.