புதுடெல்லி: பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதிநிலை விவரங்களை 45 நாட்களுக்குள்ளும், ஆண்டு நிதிநிலை விவரங்களை 60 நாட்களுக்குள்ளும் பங்குச்சந்தையில் சமர்ப்பிக்க வேண்டும். சில நிறுவனங்கள் தாமதமாக அறிவிக்கின்றன. இதனால் முதலீட்டாளர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்புகின்றனர். இதுகுறித்து செபி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தாமதமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிறுவனங்கள், இதுகுறித்து முடிவு எடுத்து ஒரு வேலை நாளுக்குள் காரணத்தை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.