2 பெண் நக்சல் சுட்டுக்கொலை

கட்சிரோலி:  மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.  மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கமாண்டோ படையினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை 8.30 மணியளவில் தனோரா தாலுகாவுக்கு உட்பட்ட நிஹால்கா காட்டு பகுதியில் அவர்கள் ேதடுதலில் ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு கமாண்டோ படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அரைமணி நேரம் இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்தது. அதை தாக்குப்பிடிக்க முடியாமல் நக்சல்கள் தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 2 பெண் நக்சல்கள் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். மேலும், அங்கிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: