கட்சிரோலி: மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கமாண்டோ படையினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை 8.30 மணியளவில் தனோரா தாலுகாவுக்கு உட்பட்ட நிஹால்கா காட்டு பகுதியில் அவர்கள் ேதடுதலில் ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு கமாண்டோ படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.