×

நகை, பணத்துக்காக காதலன், தந்தையுடன் சேர்ந்து 7 பேரை ஏமாற்றி திருமணம் சிக்கினார் பலே இளம்பெண்

திருமலை: ஆந்திராவில் நகை, பணத்துக்காக காதலன், தந்தையுடன் சேர்ந்து கொண்டு 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் காஜிப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொம்மலுறு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணாவிற்கும் பிரகாசம் மாவட்டம்,  கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி மகள் மோனிகாவுக்கும்(30) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களுக்கு பிறகு ஆனந்த் ரெட்டி, ராமகிருஷ்ணாவிடம் சென்று, மகளை சிறிது நாட்கள் தனது வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நாளாகியும், மனைவியும், மாமனாரும் வராததால், ராமகிருஷ்ணா அவர்களது சொந்த ஊருக்கு சென்று விசாரித்தார். அப்போது மோனிகா மற்றும் அவரது தந்தை ஆனந்த் ரெட்டி ஊரைவிட்டு காலி செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ராமகிருஷ்ணா காஜிப்பேட்டை   போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில்,   மோனிகா ராமகிருஷ்ணாவுடன் சேர்த்து இதுவரை 7 பேரை திருமணம் செய்தது தெரிய வந்தது. ராமகிருஷ்ணா 5வது கணவர். அவருக்கு அடுத்து விசாகப்பட்டினம் வாலிபரையும், கடைசியாக ஐதராபாத் வாலிபரையும் திருமணம் செய்துள்ளார்.

இதற்கிடையே மோனிகாவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் வைத்து அவரை கைது செய்து, காஜிபேட்டைக்கு நேற்று அழைத்து வந்தனர். விசாரணையில் பணம் மற்றும் நகைக்காக வசதி படைத்த ஆண்களை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. பின்னர் வேண்டுமென்றே ஏதாவது ஒரு பிரச்னையை ஏற்படுத்தி நகை, பணத்துடன் அவர்களை பிரிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து பெறும் நகை, பணத்தை தனது காதலனான சண்டி நாயக் மற்றும் தந்தை ஆனந்த்ரெட்டியிடம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த மோனிகாவின் தந்தை ஆனந்த் ரெட்டி,  காதலன் சண்டி நாயக்கையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lover ,many , Jewelry, money, lover, father, marriage, teenager
× RELATED கருடன் கருணை