தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி சாவு

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே சிங்கிலிபட்டியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (57). விவசாயியான இவர், கொடுக்கல், வாங்கல் தகராறு குறித்து புகார் கொடுக்க கடந்த 15ம் தேதி தூத்துக்குடியில் உள்ள எஸ்பி அலுவலகம் வந்தார். அப்போது அவர், தான் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த விஷத்தை திடீரென குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்டு பதறிய போலீசார், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று பரிதாபமாக இறந்தார்.  இதனிடையே சிப்காட் போலீசார், சங்கரநாராயணன் மனைவி முனியம்மாள், மகன் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: