சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் மிதுளன், பொதுச்செயலாளர் மதுசூதனன் ஆகியோர் அளித்த பேட்டி: ஆண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் துவங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் 90 சதவீத வரதட்சணை புகார்கள் பொய்யானவை. இதற்கு எதிராக எந்த அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை. பெண்களுக்கு தேசிய ஆணையம் இருப்பதுபோல் ஆண்களுக்கும் ேதசிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். சென்னையில் ஒரு வருடத்தில் மட்டும் 8 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் பெரும்பாலும் ஆண்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாகவும் தீர்வு வழங்கப்படுகிறது. கணவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கவே ஜீவனாம்சம் உபயோகப்படுத்தப்படுகிறது.