அர்ஜெண்டினா: அர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி 44 சிப்பந்திகளுடன் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சன் ஹுவான் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. இதை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் ஈடிபட்டனர் மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகள் தேடும் பணிக்கு உதவிகள் செய்தன. நீண்ட நாட்களாக தேடியும் கப்பல் இருக்கும் இடம் தெரிய வராததால், கடலில் மூழ்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கப்பலை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.