திருவொற்றியூரில் திருமணத்திற்கு மறுத்த காதலியை கத்தியால் குத்திவிட்டு, தானும் விஷம் அறுத்திவிட்டு போலீசில் சரண்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞர் தானும் எலிமருந்தைக் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவொற்றியூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பாலாஜி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்துக்கு பாரதியின் பெற்றோர் மறுத்துவிட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று பாரதி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு சென்ற பாலாஜி திருமணத்துக்கு வற்புறுத்தியதாகவும், பாரதி மறுத்ததால் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த பாரதியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மதுவில் எலி மருந்தைக் கலந்து குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த பாலாஜியை போலீசார் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: