சென்னை: சென்னை திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞர் தானும் எலிமருந்தைக் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவொற்றியூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பாலாஜி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்துக்கு பாரதியின் பெற்றோர் மறுத்துவிட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று பாரதி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு சென்ற பாலாஜி திருமணத்துக்கு வற்புறுத்தியதாகவும், பாரதி மறுத்ததால் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.