காவிரி பாசன மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் மிகவும் மந்தம்: ராமதாஸ் பேட்டி

சேலம்: காவிரி பாசன மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் மிகவும் மந்தம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புயல் தாக்கி 4 நாட்களாகியும் பல இடங்களில் மின்சாரம் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உணவு, குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிப்பதாகவும், அரசு மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: