வேளச்சேரியில் ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 40 சவரன் திருடிய வாலிபர் கைது

சென்னை: ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 40 சவரன் தங்க நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ்(60). கடந்த 3 நாட்களுக்கு முன் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றான். இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.  இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் குளத்தங்கரையை சேர்ந்த சிவா என்ற பகவான்(21) என தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இவரிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதைதொடர்ந்து சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: