சென்னை: ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 40 சவரன் தங்க நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ்(60). கடந்த 3 நாட்களுக்கு முன் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றான். இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.