சொல்லிட்டாங்க...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: புயலால் பாதிக்கப்பட்டு 4 நாட்களாக பரிதவிக்கும் மக்களை நேரில் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ்: புயலால் உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு கூட ஆட்சியாளர்களால் வழங்க முடியாதது வெட்கக்கேடு.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனமாக உள்ளது. பிரதமர் மோடிக்கு, இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலம் ஒன்று இருப்பதே தெரியவில்லை.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சாதி ஆணவ படுகொலைகள் நடத்தும் கொடூர குற்றவாளிகள் மற்றும் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: