லண்டன்: ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (ஜெர்மனி) மோதுகிறார். ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மற்றும் ஜோடிகள் மோதும் இந்த தொடர் லண்டன் O2 அரங்கில் நடைபெற்றது. எட்டு வீரர்களும் இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதினர். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் அரை இறுதியில் ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை (4வது ரேங்க்) மிக எளிதில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.