கல்யாண் ராமனுக்கு குண்டாஸ்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை: கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி, அவரது மனைவி ஆயிஷாவை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இஸ்லாம் பற்றி எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் மக்களிடையே மத காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகவும் முகநூலில் கடந்த 16ம் தேதி பதிவு செய்துள்ள கல்யாண் ராமனை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மத நம்பிக்கைக்கும் மத உணர்வுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அதன் பொருட்டு மதக் கலவரம் உண்டாக்கிப் பல உயிர்கள் பறிக்கப்பட வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் வேண்டுமென்றே சட்டத்திற்குப் புறம்பாக வெறுப்புணர்வைத் தூண்டும் வாசகத்தை தன் முகநூலில் தொடர்ந்து கல்யாண் ராமன் பதிவிட்டு வருகிறார். எனவே, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு போடும் கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: