சென்னை: கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி, அவரது மனைவி ஆயிஷாவை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இஸ்லாம் பற்றி எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் மக்களிடையே மத காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகவும் முகநூலில் கடந்த 16ம் தேதி பதிவு செய்துள்ள கல்யாண் ராமனை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.