சென்னை: சென்னை புறநகர் பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், காமராஜர்புரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (51). தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருநின்றவூர், எம்ஜிஆர் நகர், 2வது தெருவைச் சேர்ந்த ஜோதி (36) என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதையடுத்து, ராஜ்குமாரிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாக ஜோதி உறுதியளித்துள்ளார். இதனை நம்பி கடந்த 6 ஆண்டுக்கு முன்பு ராஜ்குமார், தனக்கும் உறவினர்கள் 3 பேருக்கும் நிலம் வாங்கித் தரும்படி ரூ.60ஆயிரத்தை ஜோதிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஜோதி வீட்டுமனை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.