விருதுநகர்: தீபாவளிக்காக தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு தலா ₹5 கோடி தரப்பட்டதாக கூறுகிறார்கள், அப்படி தரப்பட்டிருந்தால் சந்தோஷமாக கொண்டாடி இருப்போம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.விருதுநகரில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:இரட்டை இலை சின்ன விவகாரத்தில், போனில் பேசி பணம் கொடுக்க முயன்றதாக, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது ஓராண்டுக்கு முன் வழக்கு தொடர்ந்தனர். சரி, பேசியதாகவே ஒப்புக் கொள்கிறோம். ஆனால், யாரிடம் பேசினார். தேர்தல் ஆணையத்திடம் எவ்வளவு பணம் கொடுத்தார்; யாருக்கு கொடுத்தார் என சிபிஐ நீதிமன்றம் ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுச் செய்தோம். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேல்முறையீட்டு வழக்கில் டிச. 4ம் தேதி ஆஜராகிறார். அதில் குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே வருவார்.