×

சிறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக கடன் வழங்க 11,000 அதிகாரிகளுக்கு பயிற்சி

புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக கடன் வழங்க 11,000 வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி பயிற்சி அளித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்காகவும்,  முதலீடுகளை பெருக்கவும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி எளிமையாக்குமா என்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

 இந்நிலையில், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக கடன் வழங்க சுமார் 11,000 வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி பயிற்சி அளித்துள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 3,000 வங்கி கிளைகளில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு 2,000 சிறப்பு பணிமனைகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : enterprises , small enterprises,loan , Training,officers
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...