திருப்பூர்: ஆடை ஏற்றுமதியில் வங்கதேச நாட்டின் போட்டியை சமாளிக்க மத்திய அரசு ரஷ்யாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியுள்ளதாவது: சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மிகுந்த மிகப்பெரிய வர்த்தக சந்தை ரஷ்யா. 2017-18ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ₹241 கோடி மதிப்பிலான பின்னலாடை, ₹295 கோடி மதிப்பிலான ஓவன் ரக ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யாவை உள்ளடக்கிய குரேஷியா நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு ஏற்கனவே துவக்கியது.